Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Mar 12, 2007

குழந்தைகளுக்கு ஏனிந்த நிறப் பாகுபாடு !!!!

நண்பரோட குட்டிக்குழந்தைக்கு துணி எடுக்க போயிருந்தோம். குட்டீஸ் பிரிவுல இருந்த துணியெல்லாம் ரெண்டே ரெண்டு கலர்லதான் இருந்தது. ஒன்னு புளு இன்னொன்னு பிங்க். மீதிக் கலர்லாம் இல்லைன்னு கூட சொல்லலாம. அந்தளவுக்கு கம்மி. இதுவே எனக்கு அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருந்தது. நண்பர்ட்ட இதைப்பத்தி கேட்டா பையனுங்கன்னா புளு கலர், பொண்ணுங்கன்னா பிங்க் கலர் அப்டின்னாரு. கடையில எனக்கு பிடிச்ச டிசைன்லாம் புளு கலர்ல தான் இருக்கு. ஆனா நாம நினைச்ச மாதிரியெல்லாம் இங்க டிரெஸ் மாட்டி விடக்கூடாதுன்னுட்டாரு.

எனக்கு இன்னும் இந்த வித்தியாசம் விளங்கமாட்டேங்குது. ஒரு குழந்தைக்கு என்ன கலர் டிரெஸ் நல்லா இருக்கோ அதை மாட்டி விடலாம்ல. இல்லை கலருக்கு ஒன்னா போட்டு விடலாம்ல. அதை விட்டுட்டு இது என்ன திருகுதாளம்னு தெரியலை. குழந்தையை ஆண்/பெண்ணுன்னு வித்தியாசப் படுத்தி காட்டணும்ன்றதுக்காக இப்டியெல்லாம் பண்றது சரியா தெரியலை.






இந்தியாவுல இந்த மாதிரி வம்பெல்லாம இல்லைன்னு நினைக்கிறேன்.குறைஞ்ச பட்சம் எனக்கு அந்த மாதிரி அனுபவம்லாம் இல்லை. ஏன்னா நாலு வயசு வரைக்கும் "free bird" தான்.

சரி, எதுக்காக இந்த கூத்தெல்லாம் பண்றாங்கன்னு தேடுனா வர்ற விபரம் பெரிய கூத்தா இருக்கு. இந்த கலர் கண்ணாமூச்சியெல்லாம் இப்ப சமீபத்தில 20ம் நூற்றாண்டுலருந்து தான் ஆரம்பிச்சிருக்காங்க. அதுலயும் முதல்ல பையன்களுக்கு பிங்க் பொண்ணுங்களுக்கு புளுன்னு பிரிச்சிருக்காங்க. அவங்க அப்ப பிரிச்சதுக்கு ஒரு கதை வேற கட்டி வைச்சிருக்காங்க. . பிங்க் கலர், சிவப்பை வெளிற வைக்கிறதினால வருது. சிவப்புன்றது தெளிவு, வீரம், கோபம் இதைக் குறிக்குதாம். அதனால இது ஆணுக்காம். புளு கலர் அமைதியைக் குறிக்குதாம். அதனால இது பெண்ணுக்காம்.

இந்த நடைமுறைக்கு என்ன ஆச்சின்னு தெரியலை. திடீர்ன்னு பாத்தா இரண்டாம் உலகப் போருக்கப்புறமா இது அப்டியே உல்டாவாக்கிட்டாங்க. இப்ப வந்து ஆண்களுக்கு புளு, பெண்களுக்கு பிங்க்.

எவனுக்கோ என்னவோ ஆகி ஏடாகூடமா எதாவது பண்ணுனா அதை அப்டியே காப்பியடிக்கிறது நல்லாவா இருக்கு.

நம்மூர்ல மட்டும் தான் சுடலை மாடனும் அய்யனாரும் யாருக்குமே தெரியாம சிவனுக்கு சொந்தக்காரணாவங்கன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இந்த கலர் கலட்டாவைப் பாத்தா இந்த மாதிரி திருகுதாளம் எல்லா ஊருலயும் இருக்கும் போலருக்குது.

கலர் கலரா கலக்கவேண்டிய குழந்தைங்க தான் பாவம்!!!!

Oct 28, 2006

குழந்தைத் தொழிலாளி

India Literacy Project (ILP) நண்பர்கள் மூலமா சிக்கின ஒரு குழந்தை தொழிலாளி பத்தின ஒரு வீடியோ.





இந்த வீடியோவை பாத்துட்டு youtube ல நோண்டிக்கிட்டு இருந்தப்ப கிடைச்ச இன்னொரு வீடியோ. ஆணாதிக்கச் சமூகத்தில பெண்கள் படுற அவஸ்தையைப் பத்தினது.




ம்ம்ம்ம்ம்... இதெல்லாம் பாக்கும்போது, நாம போக வேண்டிய தூரம் ரொம்பவே அதிகமா தோணுது..

நன்றி : http://nalandaway.blogspot.com/

Mar 30, 2006

சரி என்ன பண்ணலாம்!!!!!

பத்மா தன்னோட பதிவுல அவங்க என்ன என்ன மாதிரி உதவிகள் சமூகத்துக்காக பண்றாங்கன்னு எழுதியிருந்தாங்க. அது நிச்சயமா அவங்களை விளம்பரப் படுத்திக்கறதுக்காக இல்லை. ஏதாவது பண்ணனும்னு நினைக்கிற ஒரு சிலருக்கு ஒரு தூண்டுதலா அமையலாமேன்ற ஒரு சின்ன ஆசையில தான்.

அந்த வகையில இந்த பதிவு. என்னோட நண்பன் ஒருத்தன் தன்னோட ஒரு அனுபவத்தைப் பத்தி மெயில் அனுப்பியிருந்தான். அந்த மெயில் சில வரிகளேன்னாலும் தன்னோட உணர்ச்சிகளை கொட்டி எழுதப்பட்டது. இதை எப்டி சொல்றேன்னா, இந்த வேலையை ஆரம்பிக்கும்போது/பண்ணிக்கிட்டு இருக்கும் போது ஒரு பார்வையாளனா(உதவி பண்ணலைன்னாலும் உபத்திரவம் பண்ணாம) கதை கேட்டுக்கிட்டு இருந்திருக்கேன். இதோட ஆரம்பம் ரொம்ப சுவராஸ்யமானது. நடந்து சுமாரா ரெண்டரை வருசம் ஆகிருச்சி. அந்த கிறிஸ்துமஸ்க்கு வீட்டுக்கு போயிட்டு நிறைய திங்கிறதுக்கு கொண்டு வந்திருந்தான். புது வருசம் முடிஞ்ச மறுநாள் சாயங்காலம் ஒரு நாலு பேரு(அவன்-அபிலாஷ், பாலாஜி-பாரி, குருவெங்கட், ஙன்னு முனியாண்டி) ஒக்காந்து ஊர்க் கதை பேசிக்கிட்டு இருந்தோம். வீட்டுக்கு போயிருந்தப்ப அவன், பக்கத்தில இருக்கற ஒரு மனநலம் குன்றியோருக்கான ஒரு விடுதிக்கு போய் தன்னோட கிறிஸ்துமஸ் கொண்டாடிருந்திருக்கான். அங்க அந்த குழந்தைகள் இவனை எதிர் கொண்ட விதத்தையும், அவங்க மத்தவங்களோட அரவணைப்புக்கு ஏங்குறதையும் சொல்லிட்டிருந்தான். இந்த கதையெல்லாம் சொல்லி முடிச்சிட்டு ஒரு கேள்வி கேட்டான். "நாம இந்த சமூகத்திட்டருந்து நிறைய எடுத்துக்கறோம்/எடுத்துக்கிட்டிருக்கோம், திருப்பி அந்த சமூகத்துக்கு என்ன பண்ணியிருக்கோம்". ஒரே ஒரு கேள்விதான், ரொம்ப சாதரணமான கேள்வி, நக்கலா ஒதுக்கிட்டு போகலாம்.

ஆனா அடுத்த எதிர் கேள்வி இந்த மாதிரி நக்கலாவோ இல்லை கேலி பண்ற மாதிரியோ இல்லை. ஏன்னா இருந்த மக்கள் எல்லாம் உணர்ச்சி குவியல்களோட உருவங்கள். எல்லாரும் கேக்குற மாதிரியே "சரி நாம என்ன பண்ணலாம்?". சாதாரணமா எல்லாரும் இதோட நிப்பாட்டிக்குவாங்க. ஆனா மக்க ஏதாவது பண்ணனும்ற ஒரு முடிவோட இருந்தாங்க. ஒவ்வொருத்தரும் மண்டைய ஒடைச்சி தெரிஞ்ச எல்லா வழியையும் எடுத்து கொட்டுனாங்க. ஒருவழியா பக்கத்தில இருக்கற எதாவது குழந்தைகளுக்கான அல்லது முதியோர்களுக்கான ஒரு விடுதிக்குப் போறது. இந்த மாதிரி சில இடங்களுக்கு போயிட்டு அதுக்கப்புறம் எதாவது முடிவு பண்ணலாம்னு முடிவு பண்ணுனாங்க. மறுபடியும் ஒரு கேள்வி வந்துச்சி. சரி எப்ப ஆரம்பிக்கலாம். முனியாண்டி கிட்ட இருந்து ஸ்டேண்டர்டான பதில் வந்துச்சி. அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம். சுத்தி இருந்தவங்கள்லாம் சுட்டெரிக்கறமாதிரி ஒரு பார்வையை விட்டுட்டு நாளைக்கி ஆரம்பிக்கறோம், அதுக்கு வழியை சொல்லுன்னு எதோ நான் செய்யாத தப்ப செஞ்சிட்ட மாதிரி பாத்தாங்க. நாங்க பேசிக்கிட்டு இருந்தது ஒரு சனிக்கிழமை. சாயங்காலம் ஆரம்பிச்ச இந்த பேச்சு ஒரு முடிவுக்கு வரும்போது மணி நைட்டு 8.00. யாருக்கும் எந்த எடமும் தெரியாது. அப்புறம் டெலிபோன் டைரக்டரிய எடுத்து வைச்சிக்கிட்டு ஆளாளுக்கு கிடைச்ச நம்பருக்கெல்லாம் போனைப் போட்டாங்க. அங்க சுத்தி இங்க சுத்தி India Literacy Project பெங்களூர் இன்சார்ஜ் சிந்து நாயக்கை(ஒரு அற்புதமான மனுஷி) பிடிச்சாங்க. அவங்க Parasparaன்ற ஒரு தொண்டு நிறுவனத்தைப் பத்தி சொல்லி அங்க எங்களை போகச் சொன்னாங்க. சரின்னு அவங்க கிட்ட Paraspara நம்பரை வாங்கி அதோட இன்சார்ஜைப் பிடிச்சாங்க. அவர் ILP (இது ஒரு funding agency மாதிரி) ரெக்கமண்டேஷன் அப்டின்றதால மறு நாளே எங்களை வரச் சொன்னாரு. அவங்க நிறைய விதயங்கள்ல கிளை பரப்பிருந்தாலும் எங்களை தெருவோர பெண் குழந்தைகளுக்காக நடத்துற ஒரு ஹாஸ்டலை பாக்க சொன்னாங்க. (இது பெங்களூருக்கு பக்கத்துல அவ்வளவா பஸ் வசதி இல்லாத ஒரு கிராமத்துல(Silvepura) இருக்கு).சொன்னது மட்டுமில்லாம அவங்களோட ஆட்டோவையும் ரெடி பண்ணி மறுநாள் அனுப்பறதா சொன்னாங்க.

நீயும் நாளைக்கு வர்றேன்னு ஒரு பார்வையே வீசிட்டு எல்லாம் சாப்ட போனாங்க. மறுநாளு ஞாபகமா எழுப்பி வேற விட்டாங்க. எந்திருச்சி போய் Nilgris ல நிறைய சாக்லேட் வாங்கிட்டு அவங்க அனுப்புன ஆட்டோல ஏறி ஒரு 15 கிமீ போனோம். எங்க எங்கயோ போன பயணங்களை விட இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்தது. அதைப் பத்தி தான் நண்பன் ILP அமெரிக்கா சேப்டருக்கு மெயில் அனுப்பியிருக்கான். அந்த மெயில் இங்க.


Dear Madam/Sir,

My name is Abhilash Vincent. I am a graduate student at Uni. of Cent. Florida. I am doing my PhD degree in Material Science and Engineering. I did my Masters at IISc. Bangalore. When I was in IISc, we happened to visit Paraspara, one of your rehabitaion centers. It was an amazing experience. My self and few of my friends went there and spend the whole day with the kids. The kids were very happy and they were enjoying our company. We realized that more than there physical needs they are looking for love an care, which they were missing a lot. They called us "Anna", and they asked us to lift them up, then sing with them, dance with them, play with them etc.... This made us to visit them most of the weekends. Later we could form a group of volunteers from IISc, who started going there. Since we were not getting enough money as scholarship to support them through donations, we decide to give them the mental support, care, education, motivation and some times small financial help too. We took them to the Visweswara museum bangalore. That was a great experience. We could see blinking eyes. Each of them were like Alice in wonderland. There were many different personalities. There was one kid always carrying her Maths note book. She was very good in Maths and she used to ask for Math problems. If she were brought up in a good environment I am sure she can become one of the geneous brains in our society. Many times Paraspara was a place we want to go and forget about or busy life and realize what we were and what we are supposed to do.

I am realy grateful to ILP and its founders who are doing a great job of bringing lights in life of thousands of kids who happened to be born unlucky in the darkest part of India

Regards,

Abhilash

அதுக்கு ILP ல இருந்து வந்த பதில்

Dear Abhilash,
It is wonderful to hear your experience and thank you so much for sharing with us. It is such experiences that make each of us at ILP realize humbly how much we had in terms of opportunity and choices. We strive to make it possible to have the same opportunities available to children from the deprived section - why should they not have the same things we did is a question we ask of ourselves often.

Many of us visit projects when we go back to our home town or villages, and come back very enriched by the experience.

Many of us are inspired to start chapters or form small groups to raise funds. We have recently initiated a scholarship program and are taking it to the next level - the main purpose is to ensure retention of the children in school and provide the children who are meritorious and have the interest and curiosity - like the girl you mention with her Maths book - an opportunity to pursue their dreams.

Thank you once again for sharing. And if I may request you, please can we use this or if you want to write more to publish in our newsletters - I'm sure many supporters will be inspired and will enjoy reading about your experience. I'm copying Nand Krishnan who coordinates Marketing programs and Newsletters on this.

Do visit any of our chapters if you happen to visit the area - DC, Pittsburgh (new one coming up at CMU), New York (new/starting at Univ of Columbia), Wesleyan Univ, Ohio, Portland, San Francisco Bay Area or Los Angeles (new). Hearing your experiences will further motivate and inspire our volunteers.

Cheers

Padmini Ranganathan
Convenor/President, India Literacy Project, USA