Mar 28, 2006

பெண்ணே! பெண்ணே!

சமீபத்தில கடந்து போன பெண்கள் தினத்துக்கு தோழிகளுக்கு வாழ்த்து அனுப்பியிருந்தேன். அதுல ஒருத்தி ஏன் ஆண்கள் தினம் கொண்டாடுறதில்லை, ஏன் எங்களுக்கு மட்டும், எனக்கு எல்லா நாளும் ஒன்னுதான்னு பொரிஞ்சி தள்ளியிருந்தா. எனக்குமே பெண்கள் தினம்னா என்னன்னு தெரியாது. அப்புறம் நெட்ல தேடுனதுல சில விவரங்கள் கெடைச்சது. நான் புரிஞ்சிக்கிட்ட வரையில பெண்கள் தங்களோட உரிமையை நிலை நாட்டுறதுக்காக போராடுன போராட்டங்களை நினைவு படுத்தற நாள். பெண்கள் தின நிகழ்ச்சிகள் தான் ரஷ்யப் புரட்சிக்கே வழி ஏற்படுதிருக்கு.

அப்டி போராடுன பெண்கள் எவ்வளவு தூரம் வெளிய வந்திருக்காங்க. முன்னேறுன நாடுகள்னு நாம சொல்ற இடங்கள்ல இது எவ்வளவு தூரம் சாத்தியமாகியிருக்குன்ற கேள்விகள் அப்பப்ப மனசுல ஓடும். வெளிய வர்றதுன்னா அடுப்படிய விட்டு மட்டுமா, சொந்த கால்ல நிக்கிறதா, ஆணுக்கு பெண் சரி நிகர்ன்னு முரசு கொட்றதா, இல்லை ஆணை விட பெண் தான் உயர்ந்தவன்னு நிரூபிக்கறதா(பட்டி மண்டபம் போட்டு இல்லை) தெரியலை. ஆனா என்னைப் பொருத்தவரைக்கும்(யாரு கேட்டா அதைப் பத்தி)......

போன வாரக் கடைசியில எங்க மாநகர(!) இந்திய மக்கள் ஒரு ஒன்று கூடலுக்கு ரெடி பண்ணியிருந்தாங்க(சுமாரா ஒரு 15 குடும்பம் இருக்கும்). இந்த பார்ட்டியில விசேசம்(!) என்னன்னா, இந்த கூட்டத்துக்கான சாப்பாட்டை ஆண்களே தயார் பண்ணி கொண்டு வரணும். நம்மளை பேச்சிலர் கணக்குல சேத்து லீவு விட்டுட்டாங்க. மத்தவங்க எல்லாம் வித விதமா சமைச்சி கொண்டு வந்திருந்தாங்க. காஞ்ச மாடு கம்மங்கொல்லையில கலக்குற மாதிரி இருந்த எல்லா அயிட்டத்தையும் கட்டிட்டு வந்தாச்சி.(இதுல அவசரத்துல ஒரு சட்டியை சுட வைக்கிறேன்னு கீழ கொட்னதெல்லாம் தனி). சும்மா சொல்லக் கூடாது. எல்லாருமே நல்லா பண்ணிருந்தாங்க. உண்மையில யாரு பண்ணுனதுன்றது அவங்களுக்கே வெளிச்சம். ஆனா என்ன ஒன்னு எல்லா வீட்லயும் பெண்கள் தான் சமையல் பண்ணுறாங்க. ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரிஞ்சாலும் அடுப்படி இன்னும் பெண்களுக்கு தான்.(இவனுக்கு பைத்தியம் முத்தி போச்சின்னு சாத்த வர்றதுக்கு முன்னாடி...)

அடுத்த நாளு கூட வேலை பாக்கிற ஒரு பொண்ணு வீட்ல பார்ட்டி. அந்த பொண்ணு இரான். அன்னைக்கு அவங்களுக்கு புது வருசம். (எங்கிட்டயும் கேட்டாங்க உன்னோட புதுவருசம் எப்பன்னு. எனக்கு தெரியலை. சித்திரை ஒன்னா இல்லை தை ஒன்னான்னு. எல்லா நாளும் எனக்கு புதுசு தான்னு கடுப்படிச்சேன்). இரானிய புது வருசம் வசந்த கால ஆரம்பத்தில பகலும் ராத்திரியும் சம அளவுல ஏற்படுற நாள்ல (spring equniox) ஆரம்பிக்குது. பார்ட்டிக்கு வர்ற ஆட்களோட எண்ணிக்கை அதிகமா இருந்ததால வர்றவங்களை சாப்பிடுறதுக்கு எதாவது பண்ணி கொண்டு வரச் சொல்லியிருந்தாங்க. நான் காரட்டை வதக்கி கொண்டு போயிருந்தேன். மொத்தம் ஒரு 10 பேரு வந்திருந்தாங்க. இருக்கறதிலயே சின்னப் பையன் நான் தான். இதுல ஒரு உக்ரைன் ஜோடி ரெண்டு பேருமே கூட வேலை பாக்கிறாங்க. அவங்க ரெண்டு மூணு அயிட்டம் பண்ணி கொண்டு வந்திருந்தாங்க. சரி நிறைய பண்ணியிருக்காங்களேன்னு அந்த பையன் கிட்ட கேட்டேன், இதுல நீ பண்ணுனது எதுன்னு. அவன், எல்லாமே என்னோட பொண்டாட்டி பண்ணுனது தான். அவளை இதெல்லாம் பண்ண வைச்சது தான் என்னோட வேலைன்னு(!!!!!). ரொம்ப பெரிய வேலை தான்னு நினைச்சிக்கிட்டேன். எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் UNOன்னு ஒரு சீட்டாட்டம் ஆடுனோம்(என்ன இருந்தாலும் நம்ம ஊரு ரம்மிக்காகுமா). ஆட்டம் இழுத்துக்கிட்டே இருந்தது. அந்த உக்ரைன் பொண்ணு தன்னோட புருசனை பாத்து, நீ காலையில நல்லா தூங்கிருவ, நான் இல்ல எந்திரிச்சி சமைக்கணும்னும் ஆட்டத்தை முடிச்சி வைச்சிச்சி. எனக்கு அந்த பொண்ணு கிட்ட ரெண்டு மூணு கேள்வி கேக்கணும்னு தோணிச்சி. ஆனா வேணாம் குடும்பத்துல குழப்பம் பண்ண வேணாம்னு விட்டுட்டேன். அதோட நம்ம கேள்வியைப் பாத்துட்டு எங்க ரெண்டு பேரும் சண்டைக்கு வந்துருவாங்களோன்ற இன்னொரு பயமும் இருந்திச்சி. ஏன்னா கூட இருக்கறவங்களே நாம எதாவது சொன்னா புரிஞ்சிக்காம சண்டைக்கு வர்றாங்க. இதுல வந்த எடத்துல எதுக்கு வம்புன்னு கம்முன்னு சிரிச்சிட்டே வந்துட்டேன்.

ஏனோ இந்த பதிவை டைப் பண்ணு முடிக்கறப்ப சம்பந்தமேயில்லாம நாரயணனோட பதிவுல இருக்கற கலீல் ஜீப்ரானோட வரி தான் ஞாபகம் வந்திச்சி.

"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையை விட்டு வெளியேறி விடுகின்றன" (அப்ப அது வரைக்கும் முனியாண்டி மாதிரி ஙன்னு முழிச்சிக்கிட்டு இருக்கறதா!!!!!)

4 comments:

Thangamani said...

//ஏப்ரல் ஒன்னா இல்லை தை ஒன்னான்னு//

Chithirai 1 or April 1 ????

:)

But nice post.

- உடுக்கை முனியாண்டி said...

சித்திரை ஒன்னு தாங்க..
நம்மளோட நாளு(ஏப்ரல் 1) நடுவால வந்துருச்சி. என்ன பண்றது..

Anonymous said...

//"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையை விட்டு வெளியேறி விடுகின்றன" //


நல்ல வரி


சாரா

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவுங்க.. ஒரு வருசம் கழிச்சு படிச்சாலும், நல்லா இருக்குன்னு சொல்லணும்னு தோணிச்சு..