Intelligence and capability are not enough. There must be the joy of doing something beautiful
Dr.G.Venkatasawamy
"Whenever I visited Madurai, for me it was a pilgrimage to visit the Arvind Eye Hospital and meet the great soul, Dr. G. Venkataswamy, who gave light to more than a hundred thousand patients -- Dr APJ Abdul Kalam
அரவிந்த் கண் மருத்துவமனை அப்டின்னா இங்க பல பேருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதோட நிறுவனர் பத்மஸ்ரீ. டாக்டர் வெங்கடசாமி போன வாரம் தன்னோட 87வது வயசுல இறந்து போயிட்டாரு. அதைப் பத்தி யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை(இல்லை என் கண்ல படலையா). சரி அவரு அவ்வளவு முக்கியமானவர் இல்லைன்னு எல்லாரும் விட்டுட்டாங்க போலருக்கு.
1948ல்ல தன்னோட கை விரல்களோட பாதி செயல் திறனை இழந்ததுக்கப்புறமா தன்னோட கண் மருத்துவரா ஆகிறதுக்கான் மேல் படிப்புகளை ஆரம்பிச்சவரு. கடைசி வரைக்கும் தன்னோட cripple ஆன விரல்களால தான் அறுவை சிகிச்சைகளை பண்ணிருக்காரு. அவர் மட்டும் தனியொருத்தரா ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை பண்ணியிருக்காரு. இது ஒரு தனி மனுசனோட ஆர்வம், உழைப்பு, ஈடுபாடு.இன்னைக்கு அவர் பேர் சொல்ல வைச்சிருக்கற விசயங்கள்ல இதுவும் ஒன்னுன்னு தான் சொல்ல முடியும். ஏன்னா முக்கியமான விசயங்கள்னு சொன்னா அது அவரோட சமூகப் பார்வை.

இன்னைக்கு பல கிராமங்கள்ல கண் பார்வைக் குறைபாடுகள் கம்மியா/இல்லாம இருக்குன்னா அதுக்கு முழு முதல் காரணம் இவர் தான். நடமாடும் கண் பரிசோதனை மையத்திட்டங்களை உருவாக்கி மருத்துவர்களை மக்களை நோக்கி அனுப்புனது இவர் தான். இது இவர் அரசாங்கத்தோட ஆதரவுல ஒரு டாக்டரா பண்ணினது.
ஆனா அரசாங்க வேலையில இருந்து ரிட்டையர் ஆனதுக்கப்புறமா பண்ணினது தான் மகத்தான விசயங்கள். சமூகத்தின் மேல அக்கறை உள்ள யாரும், உறுதியான செயல் திட்டங்களோட இறங்குனா வயசையெல்லாம் தாண்டி ஜெயிக்கமுடியும்னு காமிச்சிருக்காரு. தன்னோட ரிடையர்மெண்ட் அப்ப சொந்த முயற்சியில 11 படுக்கை வசதியோட ஆரம்பிச்சது தான் இந்த அரவிந்த் மருத்துவமனை. இன்னைக்கு உலக அளவுல பேர் சொல்ற அளவுக்கு இருக்குன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவர் மட்டும் தான் காரணம்.
http://www.aravind.orgஇன்னைக்கும் இந்த மருத்துவமனைகள் (மதுரை தாண்டி இன்னும் சில இடங்கள்ல இருக்கு) ஏழை மக்களை முன்னிறுத்திதான் தங்களோட பயணத்தை தொடர்ந்து கிட்டு இருக்கு. அரசாங்கத்தை எதிர்பார்க்காம தங்களோட செலவுலயே மக்களை நோக்கிப் பயணம் செஞ்சி இன்னும் நல்லாவே பண்றாங்க. தங்களோட மருத்துவ செலவை கவனிச்சிக்க முடிஞ்சவங்ககிட்ட வாங்குற பணம் மறுபடியும் ஏழைகளுக்கான சிகிச்சை, ஆராய்ச்சின்னு தான் செலவு செய்யப் படுது. இவங்களோட ஆராய்ச்சியால சில ஆயிரங்களுக்கு விக்கப் படுற கண்ணுக்கு உள்ள வைக்கப்படுற லென்ஸ் இப்ப சில நூறுகளுக்கு கிடைக்குது. மறுபடியும் இதுவும் சமூகத்தை முன்னிறுத்திதான்.
இவரைப் பத்தி எழுதணும்னா நிறைய எழுதலாம். ஆனா ஒரே ஒரு லிங்க் மட்டும்
இந்த அமைப்பு பத்தி எழுதப் பட்டுள்ள ஒரு
கட்டுரைஅவர் கட்டுக்கோப்பா வளர்த்த இந்த மருத்துவமனை/அமைப்பு அவரோட எண்ணங்களின்படி இன்னும் சிறப்பா வளரும்னு நம்புவோம்.
இந்த மண்ணின் மைந்தனா, இந்த மண்ணின் மக்களுக்காகவே வாழ்ந்த இந்த ஆத்மாவுக்கு எனது அஞ்சலிகள்